12 April 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறனெறி நாடில்
இடியும் முழக்கமும் ஈசர் உருவம்
கடிமலர்க் குன்றம் அலையது தானே.
 
               - திருமூலர் (10-1-16)

 

பொருள்: இறப்பையும், பிறப்பையும் முன்னே  உயிர்களுக்கு அமைத்து வைத்த தலைவன், நிலைபெற்று நிற்கின்ற தவநெறியைக் கூறும் நூல்கள் யாவை என ஆராய்ந்தால் , அவை இடிபோலவும், முரசு முதலிய பறைகள் போலவும் அனைவரும் அறிய முழங்கும் ஈசன்  திருவுருவம் மலைபோலவும், கடல் போலவும் நன்கு விளங்கித் தோன்றும்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...