01 April 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

காயம் இரண்டுங் கலந்து கொதிக்கினும்
மாயங் கத்தூரி யதுமிகும் அவ்வழி
தேசங் கலந்தொரு தேவனென் றெண்ணினும்
ஈசன் உறவுக் கெதிரில்லை தானே.
 
               - திருமூலர் (10-1-13)

 

பொருள்: நாம் காயம், கத்தூரி என்னும் இரண்டையும் கலந்து கொதிக்க வைத்தாலும் அவ்விடத்து கத்தூரியின் மணம் காயத்தின் மணத்தை அடக்கி மேற்பட்டு விளங்கும்; அதுபோல, உலகத்தார் சிவபெருமானை ஏனைத் தேவர் பலரோடு ஒப்ப வைத்து எண்ணினாலும், சிவபெருமானது திருவருளுக்கு மற்ற  தேவர்களின்  அருள் ஈடாகாது;

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...