26 April 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பிறையும் புனலும் அனலரவுஞ் சூடும்
இறைவர் எமக்கிரங்கா ரேனுங் - கறைமிடற்ற
எந்தையார்க் காட்பட்டேம் என்றென் றிருக்குமே
எந்தையா உள்ள மிது.

                - காரைகாலம்மையார் (11-4-23)


பிறையும், கங்கையும், சீரும் அரவமும் சூடிய நம் சிவபிரான் எமக்கு இறங்க வில்லை என்றாலும், கண்டத்தில் நஞ்சை நிறுத்திய அவருக்கு ஆட்பட்டுவிட்டோம் என்று எது
நடந்தாலும் எம் உள்ளம் இருக்கும்.
   

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...