25 April 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மறந்தருதீ நெறிமாற
மணிகண்டர் வாய்மைநெறி
அறந்தருநா வுக்கரசும்
ஆலால சுந்தரரும்
பிறந்தருள உளதானால்
நம்மளவோ பேருலகில்
சிறந்ததிரு முனைப்பாடித்
திறம்பாடுஞ் சீர்ப்பாடு.

             -திருநாவுக்கரசர் புராணம்  (11)


பொருள்: பாவத்தை விளைவிக்கும் தீயநெறியானது மாறுமாறு, கரியகழுத்தைக் கொண்ட சிவபெருமானின் மெய்ம்மை யான சிவநெறியை உலகிற்கு விளக்க வரும் திருநாவுக்கரசரும், ஆலாலசுந்தரரும் தோன்றியருளியது இந்நாடு என்றால், இப் பேருலகில் சிறந்த திருமுனைப்பாடி நாட்டின் திறத்தைப் பாடும் இயல், நம் அறிவளவில் அடங்குவதோ? அடங்காது.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...