19 April 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


விண்ணிறந் தார்நிலம் விண்டவ
ரென்றுமிக் காரிருவர்
கண்ணிறந் தார்தில்லை யம்பலத்
தார்கழுக் குன்றினின்று
தண்ணறுந் தாதிவர் சந்தனச்
சோலைப்பந் தாடுகின்றார்
எண்ணிறந் தாரவர் யார்கண்ண
தோமன்ன நின்னருளே.

            -திருக்கோவையார்  (8-12,18) 


பொருள்: விண்ணைக்கடந்தவர் நிலத்தைப் பிளந்தவ ரென்று சொல்லப்படும் பெரியோரிருவருடைய கண்ணைக்கடந்தார்; தில்லை அம்பலத்தார் தில்லையம்பலத்தின் கண்ணார்; அவரது கழுக்குன்றின்கணின்று தண்ணிதாகிய நறிய தாது பரந்த சந்தனச் சோலையிடத்துப் பந்தாடுகின்றார் இறப்பப்பலர்; நினதருள் அவருள் யார்கண்ணதோ? கூறுவாயாக

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...