04 April 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வந்து மிகைசெய் தாதைதாள்
மழுவால் துணித்த மறைச்சிறுவர்
அந்த உடம்பு தன்னுடனே
அரனார் மகனார் ஆயினார்
இந்த நிலைமை அறிந்தாரார்
ஈறி லாதார் தமக்கன்பு
தந்த அடியார் செய்தனவே
தவமா மன்றோ சாற்றுங்கால்.

             - சண்டேசுவர நாயனார் புராணம் (59) 


பொருள்: தம்பால் வந்து மிகவும் கொடிய செயலைச் செய்த தந்தையின் கால்களை, மழுவாயுதத்தால் வெட்டிய மறைச்சிறுவர், அவ்வுடலுடனேயே சிவபெருமானின் திருமைந்தர் ஆயினார். இந் நிலைமையை யாவரே அறிந்தார்? ஒருவரும் அறியார். இவ் வரலாற்றால் செய்யத் தக்கது ஒன்று உண்டு என்றால் அஃது, ஈறில்லாத சிவபெருமானிடத்து முழு அன்பினையும் செலுத்திய அடியவர்கள் செய்தனயாவும் தவமாகும் என்பதேயாம்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...