13 April 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


திருநாவுக் கரசுவளர்
திருத்தொண்டின் நெறிவாழ
வருஞானத் தவமுனிவர்
வாகீசர் வாய்மைதிகழ்
பெருநாமச் சீர்பரவல்
உறுகின்றேன் பேருலகில்
ஒருநாவுக் குரைசெய்ய
ஒண்ணாமை உணராதேன்.

                   -திருநாவுக்கரசு நாயனார் புராணம்  (1) 


பொருள்: திருநாவுக்கரசர் எனவும், சிவபெருமானின் திருத் தொண்டு வளர்வதற்குக் காரணமான நெறியில் நின்று உலகம் வாழும் பொருட்டு வரும் ஞானத்தவ முனிவரான வாகீசர் எனவும், வாய்மை விளங்குவதற்கு ஏதுவான பெருமையுடைய திருப்பெயரின் சிறப்பு களை, இப்பேருலகின்கண் எடுத்துக் கூறுதற்கு ஒரு நாவுக்கும் இய லாமையை உணராதவனாகிய எளியேன், போற்றத் துணிகின்றேன்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...