08 September 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மறைய வன்ஒரு மாணிவந் தடைய
வார மாய்அவன் ஆருயிர் நிறுத்தக்
கறைகொள் வேலுடைக் காலனைக் காலாற்
கடந்த காரணங் கண்டுகண் டடியேன்
இறைவன் எம்பெரு மான்என் றெப்போதும்
ஏத்தி ஏத்திநின் றஞ்சலி செய்துன்
அறைகொள் சேவடிக் கன்பொடும் அடைந்தேன்
ஆவ டுதுறை ஆதிஎம் மானே

                  -சுந்தரர்  (7-66-1)


பொருள்: திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள , எங்கள் முதற்கடவுளே , உன்னை , அந்தணனாகிய பிரமசாரி ஒருவன் அன்புடன் வந்து அடைய , அவனது அரிய உயிரைப் போகாது நிறுத்த வேண்டி , உதிரத்தைக்கொண்ட சூலத்தையுடைய இயமனைக் காலால் உதைத்துக்கொன்ற காரணத்தை உணர்ந்து உணர்ந்து , அடியேன் , ` யாவர்க்கும் முதல்வன் ; எமக்குப் பெருமான் ` என்று எப்பொழுதும் துதித்துத் துதித்து , அஞ்சலி கூப்பிநின்று , கழலும் சிலம்பும் ஒலித்தலைக் கொண்ட உனது செவ்விய திருவடியிடத்துக் கொண்ட அன்போடும் வந்து அடைந்தேன் ; என்னை ஏற்றுக் கொண்டருள் .

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...