21 September 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


செம்மைநலம் அறியாத
சிதடரொடுந் திரிவேனை
மும்மைமலம் அறுவித்து
முதலாய முதல்வன்தான்
நம்மையும்ஓர் பொருளாக்கி
நாய்சிவிகை ஏற்றுவித்த
அம்மையெனக் கருளியவா
றார்பெறுவார் அச்சோவே. 

                 -மாணிக்கவாசகர்  (8-51-9)


பொருள்: செப்பமாகிய நல்வழியை அறியாத அறிவிலி களோடு கூடித் திரிகின்ற என்னை முதல்வனாகிய பெருமான் மும்மலங்களையும் அறும்படி செய்து, எம்மையும் ஓர் பொருளாக்கி, இந்நாயைச் சிவிகையில் ஏற்றினான். எனக்கு அருள் செய்த பேற்றைப் பெற வல்லார் வேறு யாவர்?

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...