06 September 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


சூலப்படையொன் றேந்தியிரவிற் சுடுகா டிடமாகக்
கோலச்சடைக டாழக்கு ழல்யாழ் மொந்தை கொட்டவே
பாலொத்தனைய மொழியாள்காண வாடும் பரமனார்
ஏலத்தொடுநல் லிலவங்கமழும் ஈங்கோய் மலையாரே.

                    -திருஞானசம்பந்தர்  (1-70-2)


பொருள்: சூலம் ஒன்றைத்தமது படைக்கலனாக ஏந்தி இரவில் சுடுகாட்டை இடமாகக் கொண்டு அழகிய சடைகள் தாழ்ந்து தொங்கவும், குழல் யாழ் மொந்தை ஆகிய இசைக்கருவிகள் முழங்கவும், பால் போன்று இனிய மொழியினை உடைய பார்வதிதேவி காண ஆடும் பரமர் ஏலம் நல்ல இலவங்கம் முதலியன கமழும் திருவீங்கோய்மலையின்கண் எழுந்தருளியுள்ளார்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...