26 September 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பிறைகொள்சடையர் புலியினுரியர் பேழ்வாய் நாகத்தர்
கறைகொள்கண்டர் கபாலமேந்துங் கையர் கங்காளர்
மறைகொள்கீதம் பாடச்சேடர் மனையின் மகிழ்வெய்திச்
சிறைகொள்வண்டு தேனார்நறையூர்ச் சித்தீச் சரத்தாரே.

                     - திருஞானசம்பந்தர்  (1-71-1)


பொருள்: மறையவர்  இல்லங்களில் வேதப்பொருள்களை உள்ளடக்கிய பாடல்களைப் பாட, அதனைக் கேட்டுச் சிறகுகளைக் கொண்ட வண்டுகள் மகிழ்வெய்திப்பாடித் தேனை உண்ணுகின்ற நறையூரில் விளங்கும் சித்தீச்சரத்து இறைவர், பிறைசூடிய சடையர். புலித்தோலை உடுத்தவர். பிளந்த வாயினை உடையபாம்பினை அணிந்தவர். விடக் கறை பொருந்திய கழுத்தை உடையவர். பிரமனது தலையோட்டை ஏந்திய கையினை உடையவர். எலும்பு மாலை அணிந்தவர்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...