11 September 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு  திருமுறை


மண்ணதனிற் பிறந்தெய்த்து
மாண்டுவிழக் கடவேனை
எண்ணமிலா அன்பருளி
எனையாண்டிட் டென்னையுந்தன்
சுண்ணவெண்ணீ றணிவித்துத்
தூய்நெறியே சேரும் வண்ணம்
அண்ணல்எனக் கருளியவா
றார்பெறுவார் அச்சோவே. 

                   -மாணிக்கவாசகர்  (8-51-4)


பொருள்: மண்ணுலகில் பிறந்து விழகடவேனுக்கு அளவுபடாத அன்பை அருள் செய்து என்னை ஆண்டான். மேலும் எனக்குத் தன் திருவெண்ணீறு அணிவித்து, தூய்மையாகிய முத்தி நெறியை அடையும் வண்ணம் அருள்செய்தான். அவ்விறைவன் எனக்கு அருள் செய்த பேற்றைப் பெறவல்லவர் யாவர்?

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...