31 August 2017

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


முத்திநெறி அறியாத
மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப்
பழவினைகள் பாறும்வண்ணஞ்
சித்தமலம் அறுவித்துச்
சிவமாக்கி எனை ஆண்ட
அத்தன்எனக் கருளியவா
றார்பெறுவார் அச்சோவே.

              -மாணிக்கவாசகர்  (8-51-1)


பொருள்: முத்தி வழியை அறியாத மூர்க்கரோடு கூடி அவர் வழியில் முயல்கின்ற எனக்குப் பத்தி வழியை அறிவித்து, என் பழவினைகள் ஓடும்படி மனமாசு அகற்றிச் சிவ வடிவமாக்கி என்னை ஆண்டருளினன், எமது தந்தையாகிய சிவபெருமான். அப்பெருமான் அருள் செய்த பேற்றைப் பெற வல்லவர் வேறு யாவர்?

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...