29 August 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


விரைதரு கருமென் கூந்தல் விளங்கிழை வேலொண் கண்ணாள்
வெருவர விலங்கைக் கோமான் விலங்கலை யெடுத்த ஞான்று
பருவரை யனைய தோளு முடிகளும் பாறி வீழத்
திருவிர லூன்றி னானே திருக்கொண்டீச் சரத்து ளானே.

                         -திருநாவுக்கரசர்  (4-67-10)


பொருள்: திருக்கொண்டீச்சரத்துப் பெருமான் நறுமணம் கமழும் கரிய மெல்லிய கூந்தலையும் விளங்குகின்ற அணிகலன்களையும் வேல்போன்ற ஒளிபொருந்திய கண்களையும் உடைய பார்வதி அஞ்சுமாறு இராவணன் மலையை எடுத்த போது அவனுடைய பருத்த மலைபோன்ற தோள்களும் முடிகளும் சிதறி விழுமாறு அழகிய கால் விரலை ஊன்றினார் .

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...