11 August 2017

தினம் ஒரு திருமுறை


 தினம் ஒரு திருமுறை


சீல மின்றி நோன்பின்றிச்
செறிவே யின்றி அறிவின்றித்
தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச்
சுழன்று விழுந்து கிடப்பேனை
மாலுங் காட்டி வழிகாட்டி
வாரா உலக நெறியேறக்
கோலங் காட்டி ஆண்டானைக்
கொடியேன் என்றோ கூடுவதே. 

                -மாணிக்கவாசகர்  (8-50-3)


பொருள்: ஒழுக்கம் முதலானவை இல்லாமல் தோற்பாவை யின் கூத்தை நிகழ்த்திச் சுழன்று கிடக்கின்ற என்னைத் தன்னிடத்து அன்பு முதலியவற்றைக் கொடுத்து ஆண்டருளின இறைவனைக் கொடியேன் சேர்வது எந்நாளோ?

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...