28 August 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மறந்தான்கருதி வலியைநினைந்து மாறா யெடுத்தான்றோள்
நிறந்தான்முரிய நெரியவூன்றி நிறைய வருள்செய்தார்
திறந்தான்காட்டி யருளாயென்று தேவ ரவர்வேண்ட
அறந்தான்காட்டி யருளிச்செய்தார் அண்ணா மலையாரே.

                         -திருஞானசம்பந்தர்  (1-69-8)


பொருள்: தனது வலிமையை வெளிப்படுத்தித் திரிபுர அசுரர் களை அழித்து அருள் புரியுமாறு தேவர்கள் வேண்ட, தீயவரை ஒறுப்பது அறநெறியின் பாற்பட்டதாதலை உணர்த்தும் நிலையில் அசுரர்களை அழித்துத் தேவர்கட்கு அருள்செய்த பெருமானாகிய திருவண்ணாமலை இறைவன், தன் வலிமையையும், பெற்ற வெற்றிகளையும் பெரிதாக எண்ணியவனாய்த் தனக்கு மாறாகத்தான் உறையும் கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் மார்பு தோள் ஆகியனவற்றை நெரியுமாறு காலை ஊன்றிப் பின் அவ்விராவணன் வேண்ட அவனுக்கு அருள் செய்த மேம்பாடுடையவனாவன்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...