09 May 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


காண்டனன் காண்டனன் காரிகை
யாள்தன் கருத்தனாய்
ஆண்டனன் ஆண்டனன் ஆமாத்
தூர்எம் மடிகட்காட்
பூண்டனன் பூண்டனன் பொய்யன்று
சொல்லுவன் கேண்மின்கள்
மீண்டனன் மீண்டனன் வேதவித்
தல்லா தவர்கட்கே.


                 -சுந்தரர்  (7-45-1)


பொருள்: திருவாமாத்தூரில் உள்ள  தலைவனை , உமையம்மைக்குக் கணவனாகக் கண்டேன் ; அவனுக்கு அடிமை பூண்டேன் ; அடிமையைப் பலகாலும் செய்தேன் ; இவை பொய்யல்ல ; இன்னும் சொல்லுவேன் ; கேண்மின் ; வேத நெறியைப் போற்றுவோரல்லாதவர்களை நீங்கினேன் .

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...