23 May 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பைவாயரவ மரையிற்சாத்திப் பாரிடம் போற்றிசைப்ப
மெய்வாய்மேனி நீறுபூசி யேறுகந் தானிடமாம்
கைவாழ்வளையார் மைந்தரோடுங் கலவியி னானெருங்கிச்
செய்வார்தொழிலின் பாடலோவாத் தென்றிருப் பூவணமே.

                       -திருஞானசம்பந்தர்  (1-64-7)


பொருள்: பாம்பை இடையில் கட்டிக் கொண்டு, பூதகணங்கள் போற்றிப் பாட, மேனி முழுதும் மெய்மை வடிவான திருநீற்றைப் பூசி, விடையேற்றை ஊர்ந்து வரும் சிவபிரானது இடம், கைகளில் வளையல்களை அணிந்துள்ள இளமகளிர் தம் காதலர்களோடு புணர்ச்சி விருப்புடையராய் நெருங்கிச் செய்யப்படும் கலவி பற்றிய பாடல்களின் ஓசை நீங்காத அழகிய திருப்பூவணமாகும்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...