12 May 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


தள்ளும் முறைமை ஒழிந்திடஇத்
தகுதி யொழுகு மறையவர்தாம்
தெள்ளு மறைகள் முதலான
ஞானஞ் செம்பொன் வள்ளத்தில்
அள்ளி அகிலம் ஈன்றளித்த
அம்மை முலைப்பால் உடனுண்ட
பிள்ளை யார்க்கு நண்பருமாம்
பெருமை யுடையா ராயினார்.


                  -முருகநாயனார்  (11)


பொருள்: மறைகளில் தள்ளியதை  ஒழித்து, விதித்தவற்றைச் செய்து ஒழுகி வரும் அந்தணர் பெருமானாகிய முருக நாயனார் தாமும், உலகிற்கு உண்மைப் பொருளைத் தெளிவிக்கும் மறைகளில் முதன்மையாகக் கூறப்பட்டிருக்கும் சிவஞானத்தைச் செம்பொன் வள்ளத்தில் எடுத்து, உலகம் யாவற்றையும் பெற்றுக் காத்து வரும் உமையம்மையாரின் திருமுலைப்பாலுடன் சேர உண்ட திருஞானசம்பந்தப் பிள்ளையாருக்கு நண்பராகின்ற பெருமையும் உடையவரானார்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...