17 May 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


ஓர்ந்தனன் ஓர்ந்தனன் உள்ளத்துள்
ளேநின்ற ஒண்பொருள்
சேர்ந்தனன் சேர்ந்தனன் சென்று
திருவொற்றி யூர்புக்குச்
சார்ந்தனன் சார்ந்தனன் சங்கிலி
மென்றோள் தடமுலை
ஆர்ந்தனன் ஆர்ந்தனன் ஆமாத்
தூர்ஐயன் அருளதே.

                   -சுந்தரர்  (7-45-4)


பொருள்: உள்ளத்துள்ளே உள்ளே  ஒளி யுடைய பொருளை ஆராய்ந்தறிந்தேன் ; அவ்வறிவின் வழியே சென்று அதனைத் தலைப்பட்டேன் ; இனி , வெளியே , திருவொற்றியூரிற் புகுந்து ,  சங்கிலி  என்பாளது மெல்லிய தோளையும் , பெரிய தனங் களையும் சேர்ந்தேன்  ; இவ்விருவாற்றானும் , இருவகை இன்பத்தையும் நிரம்ப நுகர்ந்தேன் ; இது , திருவாமாத்தூரில் எழுந்தருளி யிருக்கின்ற தலைவனது திருவருள் .

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...