26 May 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


காட்டகத்து வேடன் கடலில் வலைவாணன்
நாட்டிற் பரிபாகன் நம்வினையை வீட்டி
அருளும் பெருந்துறையான் அங்கமல பாதம்
மருளுங் கெடநெஞ்சே வாழ்த்து. 

              -மாணிக்கவாசகர்  (8-48-3)


பொருள்: நெஞ்சே! காட்டில் வேடனாய் வந்தவனும், கடலில் வலையனாய் வந்தவனும், பாண்டி நாட்டில் குதிரைப் பாகனாய் வந்த வனும், நமது வினைகளைக் கெடுத்து நம்மை ஆண்டருள் செய்கின்ற திருப்பெருந்துறையானும் ஆகிய சிவபெருமான் திருவடியை நமது மருள் கெடும் வண்ணம் வாழ்த்துவாயாக!

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...