15 May 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மருவார்மதின்மூன் றொன்றவெய்து மாமலையான் மடந்தை
ஒருபால்பாக மாகச்செய்த வும்பர்பிரா னவனூர்
கருவார்சாலி யாலைமல்கிக் கழன்மன்னர் காத்தளித்த
திருவான்மலிந்த சேடர்வாழுந் தென்றிருப் பூவணமே.

                     -திருஞானசம்பந்தர்  (1-64-2)


பொருள்: முப்புர அசுரர் மதில்கள் மூன்றையும் ஒருசேர எய்து அழித்தோனும், மலை  மகளாகிய பார்வதிதேவியை ஒருபால் கொண்டு தேவர்கள் தலைவனாக விளங்குவோனும் ஆகிய சிவபிரானது ஊர்; கருக்கொண்ட நெற்பயிர்கள் கரும்புகள் ஆகியன நிறைந்ததும் வீரக்கழல் புனைந்த மன்னர்கள் காப்பாற்றிக் கொடுத்த செல்வவளத்தால் சிறந்த மேலானவர்கள் வாழ்வதுமான அழகிய பூவண நகராகும்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...