05 October 2016

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


மாசறு சிந்தை யன்பர்
கழுத்தரி அரிவாள் பற்றும்
ஆசில்வண் கையை மாற்ற
அம்பலத் தாடு மையர்
வீசிய செய்ய கையும்
மாவடு விடேல்வி டேலென்
றோசையுங் கமரி னின்றும்
ஒக்கவே எழுந்த வன்றே.

                        -அரிவாட்டாயநாயனார்  (18) 


பொருள்: குற்றம் அற்ற சிந்தையுடைய அன்பர், தமது கழுத்தை அரிந்திட, அரிவாளைப் பிடிக்கும் குற்றம் இலாத அக் கையைத் தடுத்து மாற்றிட, அம்பலத்து ஆடும் பெருமானது வீசி நின்றாடிய இடத் திருக்கையும், மாவடுவைக் கடித்திடும்போது `விடேல்` `விடேல்` என்று எழும் ஓசையும் அங்குள்ள நிலவெடிப் பினின்றும் ஒருங்கு எழுந்தன.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...