27 October 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


ஒப்பில் பெருங்குடி நீடிய தன்மையில் ஓவாமே
தப்பில் வளங்கள் பெருக்கி அறம்புரி சால்போடும்
செப்ப வுயர்ந்த சிறப்பின் மலிந்தது சீர்மேவும்
அப்பதி மன்னிய ஆயர் குலத்தவர் ஆனாயர்.

                       -ஆனாய நாயனார்  (8)


பொருள்: ஒப்பற்ற பெருங்குடிகள் நெடுங்காலமாகத் தழைத்துச் செழித்திருக்கும் தன்மையில் ஓயாது, தீதின்றி நன்னெறி யில் ஈட்டிய பொருள் வளத்துடன் அறமே நிலவிய சிறப்புடன் விளங்க இருப்பது அக்கணமங்கலம் என்னும் ஊராகும். அப்பதியில் வாழ்ந் திருப்பவர் இடையர் குலத்துத் தோன்றிய ஆனாயர் என்பார்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...