19 October 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


தொடையார் மாமலர் கொண்டிரு போதும்மை
அடைவா ராமடி கள்ளென
மடையார் நீர்மல்கு மன்னிய மாற்பே
றுடையீ ரேயுமை யுள்கியே.

                   - திருஞானசம்பந்தர்  (1-55-2)


பொருள்: மடைகளில் நீர் நிறைந்து விளங்கும் நிலையான திருமாற்பேற்றைத் இருப்பிடமாக உடையவரே, உம்மை நினைந்து சிறந்த மாலைகளைத் தொடுத்து ஏந்திய கையினராய்க் காலை, மாலை இருபோதும் உம்மைத்தலைவராக எண்ணி அடியவர் அடைகின்றனர்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...