24 October 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பெரும்பெரு மான்என் பிறவியை வேரறுத்
துப்பெரும்பிச்சுத்
தரும்பெரு மான்சது ரப்பெரு மான்என்
மனத்தினுள்ளே
வரும்பெரு மான்மல ரோன்நெடு மாலறி
யாமல்நின்ற
அரும்பெரு மான்உடை யாய்அடி யேன்உன்
அடைக்கலமே. 

              -மாணிக்காகவாசகர்  (8-42-3)


பொருள்: இறைவனே! பெரிய பெருமானும், என் பிறவியை வேரறுத்து எனக்குப் பெரும் பித்தேற்றும் பெருமானும்; சதுரப் பெருமானும்; என் மனத்தில் எழுந்தருளும் பெருமானும்; பிரம விட்டுணுக்கள் அறியவொண்ணாமல் நின்ற அரும்பெருமானும் ஆகிய தலைவனே! அடியேன் உன் அடைக்கலமே!.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...