18 October 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


என்றவர் போற்றி செய்ய
இடபவா கனராய்த் தோன்றி
நன்றுநீ புரிந்த செய்கை
நன்னுத லுடனே கூட
என்றும்நம் உலகில் வாழ்வாய்
என்றவ ருடனே நண்ண
மன்றுளே ஆடும் ஐயர்
மழவிடை உகைத்துச் சென்றார்.

                       -அரிவாட்டாயநாயனார்  (21) 


பொருள்: என்று அவர் போற்றி வணங்க அவர்முன், ஆனேற்றின்மீது தோன்றியருளி, `நீபுரிந்த செயல் நன்று. நல்ல நெற்றியினையுடைய உனது மனைவியுடன் என்றும் நீங்காது நமது உலகில் வாழ்வாயாக` என அருள் புரிந்து, அவரும் தம்முடன் வந்திடத் திருமன்றுள் ஆடியருளும் முதல்வனாய பெருமானும் அறக்கடவுளாம் ஆனேற்றின் மீது எழுந்தருளிச் சென்றார்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...