08 September 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தெங்குலவு சோலைத் திருஉத்தர கோசமங்கை
தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொள்வான்
பங்குலவு கோதையுந் தானும் பணிகொண்ட
கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப்
பொங்குலவு பூண்முலையீர் பொன்னூச லாடாமோ.
 
                         -மாணிக்கவாசகர் (8-16-9)

 

பொருள்: தென்னை மரங்கள் பரவியுள்ள சோலையையுடைய திருவுத்தர கோச மங்கையில் தங்குதல் பொருந்திய ஒளிமயமான  உருவத்தை உடைய இறைவன் வந்தருளி, எங்கள் பிறவியைத் தொலைத்து யாவரையும்  அடிமை கொள்ளும் பொருட்டு, ஒரு பாகமாகப் பொருந்திய மங்கையும் தானுமாய்த் தோன்றி, என் குற்றேவலைக் கொண்ட, மணம் தங்கிய கொன்றை மாலையணிந்த சடையை யுடையவனது குணத்தைப் புகழ்ந்து, நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் ஏறி ஆடுவோம்

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...