29 September 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பேறினி யிதன்மேல் உண்டோ
பிரான்திருக் கண்ணில் வந்த
ஊறுகண் டஞ்சித் தங்கண்
இடந்தப்ப உதவுங் கையை
ஏறுயர்த் தவர் தங் கையால்
பிடித்துக்கொண் டென்வ லத்தின்
மாறிலாய் நிற்க வென்று
மன்னுபே ரருள்பு ரிந்தார்.

                     -கண்ணப்ப நாயனார்  புராணம் (180)

 

பொருள்: பெருமானார் திருக்கண்ணில் வந்த ஊறாய புண்ணைக் கண்டு அஞ்சி, அதற்காகத் தமது இடக்கண்ணை இடக்க எடுத்த கண்ணப்ப நாயனாரின் கையை, ஆனேற்றுக் கொடியை உயர்த்தியருளிய பெருமானார் தம் கையால் பிடித்துக் கொண்டு, `ஒப்பில்லாத அன்பனே! என் வலப் பக்கத்தில் என்றும் நீ நிற்பாயாக` என எக்காலமும் குன்றாத சீர்மன்னி விளங்கும் பெரிய அருள் புரிந்தார்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...