22 September 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

படிசெய் நீர்மையிற் பத்தர் காள்பணிந்
தேத்தி னேன்பணி யீரருள்
வடியி லான்திரு நாவ லூரன்
வனப்பகை யப்பன் வன்றொண்டன்
செடிய னாகிலுந் தீய னாகிலுந்
தம்மை யேமனஞ் சிந்திக்கும்
அடிய னூரனை யாள்வ ரோநமக்
கடிக ளாகிய வடிகளே.
 
                  - சுந்தரர் (7-33-10)

 

பொருள்: அடியவர் செய்யும் செயல்களைப் படியெடுக்கும் தன்மையில் , திருத்தம் இல்லாதவனும் , திருநாவலூரில் தோன்றியவனும் , வனப்பகைக்கு தந்தையும் ஆகிய வன்றொண்டனேன் உங்களை வணங்கித் துதித்தேன் ; கீழ்மையை உடையவனாயினும் , கொடியவனாயினும் , தம்மையே எப்பொழுதும் மனத்தில் நினைக்கின்ற அடியவனாகிய நம்பியாரூரனை , நமக்குத் தலைவராய் உள்ள தலைவர் கைவிடாது ஆளுதல் செய்வரோ நம் பெருமான் 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...