16 September 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

செங்கண்வெள் விடையின் பாகர்
திண்ணனார் தம்மை ஆண்ட
அங்கணர் திருக்கா ளத்தி
அற்புதர் திருக்கை யன்பர்
தங்கண்முன் னிடக்குங் கையைத்
தடுக்கமூன் றடுக்கு நாக
கங்கணர் அமுத வாக்குக்
கண்ணப்ப நிற்க வென்றே.

                -கண்ணப்பநாயனார் புராணம்   (178)

 

பொருள்: செங்கண்களையுடைய விடை மீது எழுந்தருளுவோரும், திண்ணனார் தம்மை ஆண்ட அருளாளரு மாகிய இறைவராய, திருக்காளத்தி மலையில் எழுந்தருளியிருக்கும் பெருமானாரின் திருக்கை தோன்றி, திண்ண னார் தம் கண்ணை இடந்து தோண்டும் கையைத் தடுத்து நிற்ப, பாம்பினைத் திருக்கையில் அணிந்த அப்பெருமானின், அமுதமாய வாக்கு, `கண்ணப்ப நிற்க! கண்ணப்ப நிற்க! கண்ணப்ப நிற்க!` என முன்று முறை ஒலித்தது 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...