07 September 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கோணன் மாமதி சூட ரோகொடு
கொட்டி காலொர் கழலரோ
வீணை தான்அவர் கருவி யோவிடை
யேறு வேதமு தல்வரோ
நாண தாகவொர் நாகங் கொண்டரைக்
கார்ப்ப ரோநல மார்தர
ஆணை யாகநம் மடிக ளோநமக்
கடிக ளாகிய வடிகளே.
 
                   -சுந்தரர் (7-33-5)

 

பொருள்:  நமக்குத் தலைவராய் உள்ளவர் , வளைந்த  பிறையைத் தலையிற் சூடுதல் உடையவரோ,  கொடுகொட்டி   என்னும் கூத்தினை ஆடுபவரோ,   காலில் ஒரு கழலை அணிவரோ, அவரது இசைக் கருவி வீணைதானோ,   அவர் ஏறுவது விடையோ,  அவர் வேதத்திற்குத் தலைவரோ,   அரை நாணாகப் பாம்பு ஒன்றைப் பிடித்து அரையில் கட்டுவரோ ? நம்மேல் ஆணையாக நமக்கு நன்மை நிரம்புமாறு நம்மை ஆளுவரோ ? சொல்லுங்கள். 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...