02 September 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கண்டபின் கெட்டேன் எங்கள்
காளத்தி யார்கண் ணொன்று
புண்தரு குருதி நிற்க
மற்றைக்கண் குருதி பொங்கி
மண்டும்மற் றிதனுக் கஞ்சேன்
மருந்துகைக் கண்டே னின்னும்
உண்டொரு கண்அக் கண்ணை
இடந்தப்பி யொழிப்பே னென்று.
 
                     -கண்ணப்பநாயனார் புரணாம்  (176)

 

பொருள்: இதைக் கண்டதும்,அந்தோ! நான் கெட்டேன்! எங்கள் காளத்தியார் தம் கண்களில் ஒன்றான வலத் திருக்கண்ணில் குருதி வருதல் நின்றிட, மற்றைக்கண்ணாய இடக் கண்ணில் குருதி பொங்குகின்றதே! என்று எண்ணியவராய், இதற்கு யான் அஞ்ச மாட்டேன், மருந்து கையில் இருக்கக் கண்டேன், இன்னும் என்னி டத்தில் ஒரு கண் உண்டு, அக்கண்ணை நான் அம்பால் இடந்து எம் பெருமானுடைய கண்ணில் அப்பி, அக்கண்ணிலிருந்து வரும் குருதி யையும் ஒழிப்பேன் என்றார்.

 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...