27 March 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தந்தைநிலை உட்கொண்டு தளர்வு கொண்டு
தங்கள்குலத் தலைமைக்குச் சார்வு தோன்ற
வந்தகுறை பாடதனை நிரப்பு மாறு
மனங்கொண்ட குறிப்பினால் மறாமை கொண்டு
முந்தையவன் கழல்வணங்கி முறைமை தந்த
முதற்சுரிகை உடைதோலும் வாங்கிக் கொண்டு
சிந்தைபரங் கொளநின்ற திண்ண னார்க்குத்
திருத்தாதை முகமலர்ந்து செப்பு கின்றான்.
 
                  - கண்ணப்ப நாயனார் புராணம் (12-54)

 

 பொருள்: தந்தையின் நிலையைத் உள்ளே கொண்டு, தம் மனத்தில் கவலை கொண்டு, பின்னர்த் தந்தை யின் தளர்வால் தங்கள் குலத்தலைமைக்கு வந்த குறைபாட்டை நிரப்ப வேண்டும் என்று மனத்தில் கொண்ட குறிப்பால், அப்பொறுப்பினை மறாது ஏற்றுக் கொண்டு, முன்னாகத் தந்தையின் திருவடிகளை முறைப்படி வணங்கி, முறைமையால் அவன் கொடுக்கும் சுழல் வாளையும் உடைத்தோலையும் வாங்கிக் கொண்டு, உளத்தில் அரசியல் பளுவைக் கொண்ட திண்ணனார்க்கு, சிறந்த தந்தையாகிய நாகன், மகன் நிலைகண்டு முகமலர்ந்து இதனைச் சொல்லுகின்றான்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...