18 March 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

உரவெங் கரியின் னுரிபோர்த்த
பரமன் னுறையும் பதியென்பர்
குரவஞ் சுரபுன் னையும்வன்னி
மருவும் மயிலா டுதுறையே.
 
             - திருஞானசம்பந்தர் (1-38-2)
 

 

பொருள்: வலிமை உடைய  கொடியயானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்த பரமன் உறையும் பதி, குராமரம், சுரபுன்னை வன்னி ஆகிய மரங்கள் உள்ள திருமயிலாடுதுறை ஆகும்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...