23 March 2015

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை

பன்னாட் பரவிப்
பணிசெய்யப் பாதமலர்
என்னாகம் துன்னவைத்த
பெரியோன் எழிற்சுடராய்க்
கன்னா ருரித்தென்னை
யாண்டுகொண்டான் கழலிணைகள்
பொன்னான வாபாடிப்
பூவல்லி கொய்யாமோ.
 
              -  மாணிக்கவாசகர் (8-13-9)

 

பொருள்:  பல நாள் துதித்து, பணிவிடை செய்யும் படி, தன் திருவடி மலரை, என் மனத்தில் பொருந்த அமைத்த பெருமையையுடையான், அழகிய சோதியாகி, முற்படக் கல்லில் நார் உரித்த பிறகு என்னை ஆண்டருளினவனுடைய இரண்டு திருவடிகள் அழகியனவாயிருந்த விதத்தைப் புகழ்ந்து பாடிப் பூவல்லி கொய்யாமோ

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...