17 March 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சொன்னவுரை கேட்டலுமே நாகன் தானும்
சூழ்ந்துவருந் தன்மூப்பின் தொடர்வு நோக்கி
முன்னவர்கட் குரைசெய்வான் மூப்பி னாலே
முன்புபோல் வேட்டையினின் முயல கில்லேன்
என்மகனை உங்களுக்கு நாத னாக
எல்லீருங் கைக்கொண்மி னென்ற போதில்
அன்னவரு மிரங்கிப்பின் மகிழ்ந்து தங்கோன்
அடிவணங்கி இம்மாற்றம் அறைகின் றார்கள்.
 
                 -கண்ணப்பநாயனார் புராணம்  (45)

 

பொருள்: இவ்வாறுகூறியவற்றைக் கேட்டலுமே நாகன் தானும், தன்னைப்பற்றி வரும் தன் மூப்பின் தொடர்ச்சியினை நோக்கி, சொன்ன அவர்க்கு முன்னாகச் சொல்வான், மூப்பி னால் நான் முன்பு போலச் செப்பமாக வேட்டையினில் முயற்சி கொள்ள இயலாதாயிற்று. ஆதலின் என் மகன் திண்ணனை உங்கட்குத் தலைவனாக எல்லீரும் ஏற்றுக் கொள்ளுங்கள்` என, அது கேட்ட அவ்வேடர்களும் அவன் நிலை கண்டு இரங்கினர், எனினும் திண்ண னாரைத் தலைவராகக் கொண்டனர். 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...