09 February 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அருந்தவருக் காலின்கீழ்
அறமுதலா நான்கனையும்
இருந்தவருக் கருளுமது
எனக்கறிய இயம்பேடீ
அருந்தவருக் கறமுதல்நான்
கன்றருளிச் செய்திலனேல்
திருந்தவருக் குலகியற்கை
தெரியாகாண் சாழலோ.
 
                    - மாணிக்கவாசகர் (8-12-20)

 

பொருள்: சனகாதியர்க்கு ஆல மர நீழலிருந்து அறம் முதலியவற்றை அருள் செய்த வரலாறு எற்றுக்கு? என்று புத்தன் வினாவ, அறம் முதலியவற்றை இறைவன் அருள் செய்யாவிடின் அவர்கட்கு உலக இயற்கைகள் தெரியமாட்டா என்று அப்பெண் கூறினாள்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...