13 February 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அண்ணலைக் கையில் ஏந்தற்
கருமையால் உரிமைப் பேரும்
திண்ணன்என் றியம்பும் என்னத்
திண்சிலை வேட ரார்த்தார்
புண்ணியப் பொருளா யுள்ள
பொருவில்சீர் உருவி னானைக்
கண்ணினுக் கணியாத் தங்கள்
கலன்பல வணிந்தா ரன்றே.

               -கண்ணப்பநாயனார் புராணம்  (17)

 

பொருள்: தலைமைசான்ற அக்குழந்தையை நாகன் கையில் எடுத்து ஏந்துவதற்கு அருமையாக இருத்தலால், இக்குழந்தைக்கு உற்றபேரும் ``திண்ணன்`` என்று அழையுங்கள் என்னலும், வலிமை பொருந்திய வில்வேடர் யாவரும் பேரொலி செய்து மகிழ்ந்தார்கள். அதுபொழுது புண்ணியத்தின் பொருளாய் நின்ற தனக்கு நிகரில்லாத சிறப்பினையுடைய அக்குழந்தைக்கு, அங்குள்ள வேடர்கள் தங்கள் கண்ணிற்கு அழகு பொருந்தத் தங்களிடத்துள்ள பல அணிகலன் களையும் அணிவித்தார்கள்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...