03 February 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அந்நின்ற தொண்டர்
திருவுள்ளம் ஆரறிவார்
முன்னின்ற பாதகனும்
தன்கருத்தே முற்றுவித்தான்
இந்நின்ற தன்மை
யறிவார் அவர்க்கருள
மின்னின்ற செஞ்சடையார்
தாமே வெளிநின்றார்.
 
                 - ஏனாதி நாயனார் புராணம் (40)

 

பொருள்: அவ்வாறு நின்ற திருத்தொண்டரின் திரு வுள்ளத்தை அறிவர் யார் ? முன்னின்ற கொடியோனாகிய அதிசூரனும் தான் நினைத்தவாறே முடித்தனன். இத்தன்மையினை அறிவாராகிய இத்திருத்தொண்டருக்கு அருளும் பொருட்டு மின் போன்ற செஞ்சடையினையுடைய சிவபெருமானும் தாமே வெளிப் பட்டுத் தோன்றி நின்றருளினார்

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...