26 February 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பான்மையில் சமைத்துக் கொண்டு
படைக்கலம் வினைஞர் ஏந்தத்
தேனலர் கொன்றை யார்தம்
திருச்சிலைச் செம்பொன் மேரு
வானது கடலின் நஞ்சம்
ஆக்கிட அவர்க்கே பின்னும்
கானஊன் அமுத மாக்கும்
சிலையினைக் காப்புச் சேர்த்தார்.

            -கண்ணப்ப  நாயனார் புராணம் (32)

 

பொருள்: விழா எடுத்தற்குரிய முறையில் பணியாளர்கள் வில்லினை ஏந்த, தேன் பொருந்த அலரும் கொன்றையை அணிந்த சிவபெருமானுடைய சிவந்த பொன்மயமான மேருமலையானது முன்னர்ப் பாற்கடலில் மத்தாகக் கடைந்தபோது அவருக்கு நஞ்சை எடுத்து உண்ணும்படி கொடுத்ததற்குத் தீர்வாக, அப்பெருமானுக்குப் பின்னர், இம்மலையின்கண் ஊன் ஆகும் அமுதைக் கொடுக்க இப்பொழுது திண்ணனார் கையில் வில்லாயிற்று எனக் கூறுமாறு அமைந்த அவ் வில்லிற்குக் காப்புக்கட்டினர்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...