17 February 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கமழ்தரு சடையி னுள்ளாற் கடும்புன லரவி னோடு
தவழ்தரு மதியம் வைத்துத் தன்னடி பலரு மேத்த
மழுவது வலங்கை யேந்தி மாதொரு பாக மாகி
எழில்தரு பொழில்கள் சூழ்ந்த விடைமரு திடங்கொண் டாரே.
 
                     - திருநாவுக்கரசர் (4-35-8)
 
பொருள்: பூக்களின் நறுமணம் கமழும் சடையினுள்ளே விரைந்து ஓடும் கங்கை , பாம்பு பிறை இவற்றைச் சூடித் தம் திருவடிகளைப் பலரும் துதிக்குமாறு மழுப்படையை வலக்கையில் ஏந்திப் உமை பாகராய் அழகிய சோலைகள் சூழ்ந்த இடைமருதுப் பெருமான் இடமாக கொண்டார்  .

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...