26 March 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

குமுதமே திருவாய் குவளையே களமும்
குழையதே யிருசெவி ஒருபால்
விமலமே கலையும் உடையரே சடைமேல்
மிளிருமே பொறிவரி நாகம்
கமலமே வதனம் கமலமே நயனம்
கனகமே திருவடி நிலை நீர்
அமலமே யாகில் அவரிடம் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
 
               - கருவூர் தேவர் (9-9-9)

 

பொருள்: குமுத மலர் போன்ற செய்யவாயினர். கருங் குவளைபோலக் கரிய கழுத்தினர். இருகாதுகளில் வலக்காதில் குழையை அணிந்தவர். இடப்பகுதியில் களங்கமற்ற மேகலையை உடையவர். சடையின் மேல் புள்ளிகளையும் கோடுகளையும் உடைய பாம்பு நெளிகின்றது. அவருடைய முகமும் கண்ணும் தாமரை போன்று உள்ளன. அவருடைய பாதுகை பொன்மயமானது. அவருடைய நீர்மை களங்கமற்றது. அவர் உறைவிடம் களத்தூர் ஆதித்தேச்சர மாகும்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...