12 March 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பவளமே மகுடம் பவளமே திருவாய்
பவளமே திருவுடம் பதனில்
தவளமே களபம் தவளமே புரிநூல்
தவளமே முறுவல்ஆ டரவந்
துவளுமே கலையும் துகிலுமே யொருபால்
துடியிடை இடமருங் கொருத்தி
அவளுமே ஆகில் அவரிடங் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
 
                   - கருவூர்த்தேவர் (9-9-5)

 

பொருள்: சிவபெருமானுடைய சடையும் திருவாயும் திரு வுடம்பும் பவளம் போலச் செய்யன. உடம்பில் பூசிய திருநீறும் அணிந்த புரிநூலும் பற்களும்வெண்ணிறத்தன. பாம்புகள்  நெளிகின்றன. ஒரு புறம் புலித்தோல் ஆடை; ஒருபுறம்  நல்ல ஆடை. இடப்பகுதியாகத் துடிபோன்றஇடையை உடைய ஒப்பற்ற வளாகியபார்வதியும் இருப்பாள். இவையாவும் உண்மையாவது போல அவர் உறைவிடம் களத்தூர் ஆதித்தேச்சரம் ஆகும். 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...