03 October 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

         மாதர்ப் பிறைக்கண்ணி யானை
               மலையான் மகளொடும் பாடிப்
         போதொடு நீர்சுமந் தேத்திப்
     புகுவா ரவர்பின் புகுவேன்

யாதுஞ் சுவடு படாமல்
     ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங்
     களிறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங்
     கண்டறி யாதன கண்டேன்


                                - திருநாவுக்கரசர் (4.3.1)

குறிப்பு: கைலாயக்காட்சியை வேண்டி நாவக்கரசர் கைலாயம் நோக்கி சென்றபொழுது இறைவன் அவரை சோதித்து அங்குள்ள குளத்தில் முழ்கி எழுமாறு பணித்தார். அவ்வாறே  நாவக்கரசர் அங்கே முழ்கி திருவையாறில் எழுந்தார். இறைவன் கைலாயக்காட்சியை அங்கே காட்டியபொழுது பாடிய பாடல் இது.




No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...