28 June 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


நில்லாத உலகியல்பு
கண்டுநிலை யாவாழ்க்கை
அல்லேன்என் றறத்துறந்து
சமயங்க ளானவற்றின்
நல்லாறு தெரிந்துணர
நம்பர்அரு ளாமையினால்
கொல்லாமை மறைந்துறையும்
அமண்சமயம் குறுகுவார்.

                  -திருநாவுக்கரசர் புராணம்  (37)


பொருள்: நிலையில்லாத இவ்வுலகியல்பைக் கண்டு, நிலையற்ற இந்த நிலவுலக வாழ்வில் நின்று உழலகில்லேன் என முற்றத் துறந்து, சமயங்களின் நல்ல நெறியைத் தெரிந்து உணர்வதற்கு நம்பரான சிவபெருமான் அருள் செய்யாமையால், கொல்லாமையை மேற்கொண்டு அதனுள் மறைந்து வாழும் சமண சமயத்தைச் சார்பவர் ஆகி.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...