14 June 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


எந்தையும்எம் அனையும்அவர்க்
கெனைக்கொடுக்க இசைந்தார்கள்
அந்தமுறை யால்அவர்க்கே
உரியதுநான் ஆதலினால்
இந்தவுயிர் அவருயிரோ
டிசைவிப்பன் எனத்துணிய
வந்தவர்தம் அடியிணைமேல்
மருணீக்கி யார்விழுந்தார்.

           -திருநாவுக்கரசர் புராணம்  (32)


பொருள்: என்னுடைய தந்தையாரும் தாயாரும் என்னை அவர்க்குத் தர இசைந்தனர். அம் முறையால் நான் அவர்க்காக உரியது ஆதலால், இந்த என் உயிரை அவருடைய உயிருடன் சேரச் செய்வேன் என்று துணிவுகொள்ள, அவருடைய திருவடிகளில் மருணீக்கியார் விழுந்தனராகி.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...