21 June 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


ஆரம் பரந்து திரைபொரு
நீர்முகில் மீன்பரப்பிச்
சீரம் பரத்திற் றிகழ்ந்தொளி
தோன்றுந் துறைவர்சென்றார்
போரும் பரிசு புகன்றன
ரோபுலி யூர்ப்புனிதன்
சீரம்பர் சுற்றி யெற்றிச்
சிறந்தார்க்குஞ் செறிகடலே.

             -திருக்கோவையார்  (8-15,2)


பொருள்:  புலியூர்க்கணுளனாகிய தூயோனது புகழையுடைய அம்பரைச் சூழ்ந்து; எற்றி கரையைமோதி; மிக்கொலிக்கும் வரையிகவாத கடலே; முத்துப்பரந்து திரைக டம்முட்பொருங் கடனீர்; முகிலையு மீனையுந் தன்கட் பரப்பிச் சீர்த்த வாகாயமேபோல விளங்கி; ஒளிபுலப் படுத்துந் துறையையுடையவர்; சென்றவர்; மீண்டுவரும்பரிசு உனக்குக் கூறினரோ?

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...