11 June 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


ஏனற் பசுங்கதி ரென்றூழ்க்
கழிய எழிலியுன்னிக்
கானக் குறவர்கள் கம்பலை
செய்யும்வம் பார்சிலம்பா
யானிற்றை யாமத்து நின்னருள்
மேல்நிற்க லுற்றுச்சென்றேன்
தேனக்க கொன்றையன் தில்லை
யுறார்செல்லுஞ் செல்லல்களே.

                     -திருக்கோவையார்  (8-14,12) 


பொருள்:  பசியகதிர் கோடையாலழிய; எழிலி உன்னி அஃதழியாமன் மழைபெறக் கருதி; கானத்துவாழுங் குறவர்கள் தெய்வத்திற்குப் பலி கொடுத்தாரவாரிக்கும் வம்பார்ந்த சிலம்பை யுடையாய்; இற்றையிரவின்கண் யான் நின்னேவன்மேனிற்கவேண்டி; தேனோடுமலர்ந்த கொன்றையையுடையானது தில்லையைப் பொருந்தாதாரடையுந் துன்பத்தையடைந்தேன்; நீ கருதியதூஉ முடிந்தது

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...