09 June 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


தேரரக்கன் மால்வரையைத் தெற்றி யெடுக்கவவன்
றாரரக்குந் திண்முடிக ளூன்றிய சங்கரனூர்
காரரக்குங் கடல்கிளர்ந்த காலமெலா முணரப்
பாரரக்கம் பயில்புகாரிற் பல்லவ னீச்சரமே.

                   -திருஞானசம்பந்தர் (1-65-8)


பொருள்:  இராவணன் கயிலை மலையைக்  அகழ்ந்து எடுக்க, மாலைகள் அழுத்தும் அவனது திண்ணிய தலைகள் பத்தையும் கால் விரலால் ஊன்றி நெரித்த சங்கரனது ஊர், மேகங்கள் வந்து அழுந்தி முகக்கும் கடல், கிளர்ந்து எழும் காலங்களிலும் அழியாது உணரப்படும் சிறப்பினதும், மக்கள் அக்குமணிமாலை பூண்டு போற்றி வாழும் பெருமையுடையதுமாகிய, புகார் நகரைச் சேர்ந்த பல்லவனீச்சரமாகும்

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...